என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "visa cancell"

    • பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து எஸ்.வி.இ.எஸ். விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சண்டிகர்:

    பஹல்காமில் பாகிஸ் தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதோடு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    இதுதவிர 'சார்க்' கூட்ட மைப்பு நாடுகளுக்கான நுழைவு இசைவுத் திட்டத்தின் கீழ் (எஸ்.வி.இ.எஸ்.) பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்.வி.இ.எஸ். விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


    அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்பட்டது. இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தி யாவுக்குள் நுைழந்த பாகிஸ்தானியர்கள் வரும் மே 1-ந்தேதிக்குள் இதே எல்லை வழியாகத் திரும்பு வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள் ளப்பட்டதாக வெளியுற வுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்திருந்த பாகிஸ்தானி யர்கள் சிலர் அட்டாரி-வாகா எல்லையை நேற்று (வியாழக்கிழமை) வந்தடைந்தனர். அங்கிருந்து நிலப்பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு திருப்பிச் செல்லத் தொடங்கினர்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி, ஹுசைனி வாலா (பெரோஸ்பூர் மாவட்டம்) மற்றும் சாத்கி (அபோகர் மாவட்டம்) ஆகிய எல்லைகளில் நடை பெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் ராணுவ கமாண்டருடன் கைகுலுக் கும் நடைமுறையை நிறுத்து வதாக எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) தெரிவித்தது.

    மேலும் நிகழ்ச்சியின் போது எல்லையில் உள்ள கதவுகள் இனி மூடப்படுகிறது.

    ×