என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villupuram student"

    • மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • மாணவன் உயிரிழந்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் வீட்டில் இருந்து மோகன்ராஜ் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளி வளாகத்தின் வழியாக வகுப்பறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    இந்த காட்சிகள் பள்ளி வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதனையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பதறியடித்து கொண்டு ஓடி வந்து மாணவனை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மோகன் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அறிந்த விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    இச்சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், ஏ.எஸ்.பி. ரவீந்திரகுப்தா மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

    கண்டமங்கலம் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி அஷ்ட லட்சுமி, மீண்டும் நீட்தேர்வு எழுதி வெற்றி பெற்று டாக்டர் ஆக உள்ளதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ளது சேஷாங்கனூர் காலனி. இந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ராதாகிருஷ்ணன்- பழனியம்மாள் ஆகியோரின் 3-வது மகள் அஷ்டலட்சுமி (வயது 17). இவர் கண்டமங்கலம் வள்ளலார் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2வில் அறிவியல் பாடம் எடுத்து படித்து தேர்வு எழுதி 738 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார்.

    நீட்தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி அஷ்டலட்சுமி சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சி செய்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி அஷ்டலட்சுமி மாலைமலர் நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது பெற்றோர்கள் ஆசைப்படியும் எனது விருப்பப்படியும் நான் சிறுவயதிலிருந்தே படித்து டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசையில் கண்டமங்கலம் வள்ளலார் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தேன்.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 448 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன். தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்து பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி 738 மதிப்பெண்பெற்று வெற்றி பெற்றேன்.

    எப்படியும் டாக்டர் ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் கும்மிடிப் பூண்டியில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றேன். பின்னர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட சென்னை குரோம்பேட்டை தேர்வு மையத்தில் தேர்வு எழுதினேன்.

    சமீபத்தில் நீட் தேர்வு முடிவு வந்தது அதில் நான் தோல்வி அடைந்தேன் இதனால் எனது டாக்டர் கனவு பலிக்கவில்லையே என்ற மனவேதனையுடன் இருந்தேன். மேலும் எனக்கு அவமானமாக இருந்தது. இந்த நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் நான் எப்படியும் டாக்டர் படிப்பில் சேர்ந்திருப்பேன் என்று புலம்பி கொண்டிருந்த எனக்கு எனது அப்பா-அம்மா, அண்ணன் அக்கா ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். எனது மனம் அவர்களது சமாதானத்தை ஏற்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செத்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். எனது பெற்றோர்கள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.

    என்னை போன்ற ஏழை மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எனது பெற்றோர்கள் ஆசைப்படியும் எனது விருப்பப்படியும் மீண்டும் நீட்தேர்வு எழுதி வெற்றிபெற்று டாக்டர் ஆவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

    இவ்வாறு அஷ்டலட்சுமி கண்ணீருடன் கூறினார்.

    ×