என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vijayakanth Statue"
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.
- அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் கிராமத்தில் காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருஉருவ சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காட்டாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா. இவர் இக்கிராமத்தில் ஓம்சக்தி ஆலயம் கட்டி அதனை பராமரித்து வருகிறார்.
யூ டியூபில் விடியோ பதிவிட்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில் இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் கொண்ட பற்று காரணமாக அவரின் 5 அடி திருஉருவ சிலை நிறுவி, இன்று அச்சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தார்.
காட்டாகரம் பகுதியில் விஜயகாந்துக்கு திருஉருவ சிலை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உருவ சிலைக்கு கும்பாபிஷேகம் செய்து அதனை யூடியூபில் மட்டுமே வெளியிட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.
திருப்பூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
கும்பாபிஷேக விழா மேள தாளங்களுடன் நிறைவடைந்த நிலையில், விஜயகாந்துக்கு கற்பூர தீபாராதனை செய்து தொண்டரகள் வழிபட்டனர். அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்