search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijaya Kumar"

    • தமிழில் மிகவும் பிரபலமான நடிகர் விஜயகுமார்.
    • இவர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் பரவி வந்தது.

    தமிழில் பிரபல நடிகரான விஜயகுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், குணசித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 'நாட்டாமை' படத்தில் இவரின் கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.


    விஜயகுமார் - அருண் விஜய்

    இந்நிலையில், நடிகர் விஜயகுமாருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அப்பா வீட்டில் நலமுடன் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டு தனது அப்பா விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.



    மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வீட்டை காலி செய்ய மறுப்பதாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். #Vijayakumar #Vanitha
    நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் ஏராளமான அறைகள் உள்ளன. சினிமா படப்பிடிப்புக்காக இந்த பங்களா வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

    இந்த வீட்டை, விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகள் வனிதாவுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். படப்பிடிப்பு ஒன்றுக்காக வனிதா இந்த வீட்டை தந்தையிடம் கேட்டுப் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து விஜயகுமார், வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் வீட்டில் எனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யுங்கள் என்று வனிதாவிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

    இதற்கிடையே நடிகை வனிதா, ஆலப்பாக்கம் வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். அவதூறாகவும் பேசினார்.

    நடிகை வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் தனது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமான விஜய குமாரின் அடுத்த படமான உறியடி 2 படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். #Uriyadi2 #Uriyadi2FirstLook
    `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

    அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். இது தயாரிக்கும் 7-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.

    விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்' பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். `உறியடி' முதல் பாகத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.



    விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ள கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லினு என்ற புதுமுகம் படத்தொகுப்பையும், ஏழுமலை ஆதிகேசவன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துடன் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

    உறியடி படம் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்த விஜய குமார், சூர்யா நிறுவனத்துடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. #Uriyadi2 #Uriyadi2FirstLook

    ×