search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Victory Day"

    • புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
    • முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை,முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
    • இந்த நிகழ்வில் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு போராடி உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்யும் நிகழ்வு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்கம் சார்பில் நடைபெற்றது.

    முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைவேலு, ஜகபர் அலி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் முகம்மது இக்பால்தீன், தங்கமணி, வட்டாரத் தலைவர் கண்ணன், சங்க உறுப்பினர்கள் கார்த்தி, பார்த்திபன், நவீன், அரசு வழக்கறிஞர் ஷர்மிலிபானு மற்றும் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×