என் மலர்
நீங்கள் தேடியது "Victory Day"
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ரஷியா அதிபர் புதின் ஏற்றுக்கொண்டார்.
- வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.
பியாங்காங்:
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷியா அதிபர் புதின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ரஷியா அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால் வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், வடகொரியா அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவின் அழைப்பை ஏற்று ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டது.
அச்சமயத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
- முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை,முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
- இந்த நிகழ்வில் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு போராடி உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்யும் நிகழ்வு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்கம் சார்பில் நடைபெற்றது.
முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைவேலு, ஜகபர் அலி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் முகம்மது இக்பால்தீன், தங்கமணி, வட்டாரத் தலைவர் கண்ணன், சங்க உறுப்பினர்கள் கார்த்தி, பார்த்திபன், நவீன், அரசு வழக்கறிஞர் ஷர்மிலிபானு மற்றும் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.






