search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
    X

    மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

    • உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
    • இந்த நிகழ்வில் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு போராடி உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்யும் நிகழ்வு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்கம் சார்பில் நடைபெற்றது.

    முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைவேலு, ஜகபர் அலி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் முகம்மது இக்பால்தீன், தங்கமணி, வட்டாரத் தலைவர் கண்ணன், சங்க உறுப்பினர்கள் கார்த்தி, பார்த்திபன், நவீன், அரசு வழக்கறிஞர் ஷர்மிலிபானு மற்றும் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×