search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary Medical College"

    • நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மருத்துவ மற்றும் உயிர்த்தொழில்நுட்பவியல் சங்கத்தின் 9-ம் ஆண்டு மாநாடு மற்றும் நவீன உயிர்தொழில்நுட்பவியல் மூலம் கால்நடை மற்றும் கோழியினங்களின் உடல்நலன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் என்ற தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் தலைமை தாங்கி இக்கருத்தரங்கின் போது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    டாக்டர் ஏ.ஜே.தாமி சிறப்பு இறுதி அறிக்கையை சமர்பித்தார். முன்னதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) எட்வின் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் 29 விஞ்ஞானிகள், 40 முதுநிலை மாணவர்கள் மற்றும் 10 இளநிலை விஞ்ஞானிகள் உள்பட 79 பேருக்கு சிறந்த ஆய்வு கட்டுரைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

    வயநாடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாவோயிஸ்டுகள் வெடி பொருளை வைத்து சென்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வயநாடு அருகே உள்ள பூக்காடுனங்கு பகுதியில் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர்.

    அவர்கள் பல்கலைக் கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியை மிரட்டி நுழைவு வாயில் அருகே சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிளக்ஸ் போர்டுகளையும் கட்டினர்.

    சுவரொட்டியில் சி.பி.ஐ. மாவோயிஸ்டுகளின் 14-ம் ஆண்டு பிறந்த நாள் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கொண்டாடப்படும் என எழுதப்பட்டு உள்ளது. பின்னர் வெளியே செல்ல காவலாளியிடம் வழிகேட்டனர். காலையில் அந்த வழியாக 3 மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் வழி கேட்டு விட்டு மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் புகுந்துவிட்டனர்.

    மாவோயிஸ்டுகள் அங்கிருந்து செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வெடி பொருளை வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வயநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். மாவோயிஸ்டுகள் வைத்து சென்ற வெடி பொருளை வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவை வெடி பொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. வயநாடு பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் நடமாட்டம அதிகரித்து வருகிறது. அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ×