search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetable merchant"

    மேட்டுப்பாளையத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 10.50 மணிக்கு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் சீட்டின் கீழ் பகுதியில் ஒரு கைப்பையில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் அப்துல் ஹக்கீம் என்பது தெரிய வந்தது. அவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் புதிய மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    இந்த பணத்தை ஊட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் கூறுங்கள் என பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அப்துல் ஹக்கீம் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் வந்தார். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தாருமான புனிதாவிடம் காய்கறி மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க தான் இந்த பணத்தை கொண்டு செல்கிறேன். பணத்தை கொடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.இதற்கான சில ரசீதுகளையும் காண்பித்தார். அவரிடம் அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிப்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

    இந்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அங்கு உரிய ஆவணங்களை நீங்கள் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என கூறிவிட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்படட பணம் கோவையில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  #LSPolls

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காய்கறி வியாபாரியிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த, மற்றொரு காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 47). காய்கறி வியாபாரி. அதே பகுதியில் உள்ள நரசம்மா காலனியை சேர்ந்தவர் எல்லப்பா(60). இவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் எல்லப்பா அடிக்கடி மஞ்சுநாத்திடம் பணம் வாங்குவதும், கொடுப்பதுமாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு 21-ந் தேதி முதல் அதே ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை மூன்று தவணையாக ரூ. 38 லட்சத்தை எல்லப்பா, மஞ்சுநாத்திடமிருந்து கடனாக பெற்றுள்ளார். அவ்வாறு பெற்ற கடனை திருப்பி கேட்கும் போதெல்லாம், கொடுத்து விடுகிறேன் என்று கூறி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வங்கி காசோலை 3 கொடுத்து, வங்கியில் இருந்து பணம் எடுத்துகொள்ளுமாறு எல்லப்பா கூறினார். ஆனால் வங்கியில் காசோலையை செலுத்திய போது தான், அந்த வங்கியில் அவரது கணக்கை முடித்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து எல்லப்பாவிடம், மஞ்சுநாத் கேட்டபோது, பணத்தை கொடுக்க மறுத்ததுடன், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மஞ்சுநாத் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத்பாஷா வழக்குப்பதிவு செய்து, எல்லப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    முன்விரோத தகராறில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் அரவிந்த் (வயது 27). தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அரவிந்த் வழக்கம் போல் வியாபாரம் செய்வதற்காக மார்க்கெட்டிற்கு வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மாகாலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணையில் தஞ்சை வடக்கு அலங்கம் கொடிமரத்து மூலை பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 22) என்பவரின் உறவினர்களுக்கும், அரவிந்த் உறவினருக்கும் இடையே ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சணை இருந்து வந்தது. இதுநாளடையில் தகராறாக மாறி இவர்களுக்கு இடையில் முன்விரோம் இருந்து வந்தது. இதன்காரணமாக ராகுல் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணன் (25). அமீன் (24), மற்றும் ஜெயசூரியன் (23) ஆகியோரின் உதவியுடன் அரவிந்தை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×