search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VAO suspended"

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.
    • சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார் (35). அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக சதீஷ்குமாரை அணுகி உள்ளார்.

    அப்போது சதீஷ்குமார் பட்டா மாறுதல் செய்து தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத செல்வராஜ் இது பற்றி கருங்கல்பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.

    அதன்படி சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலுவலகத்தில் நுழைந்து சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தார்கள். மேலும் லஞ்சம் பெற இடைத்தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகரில் இருக்கும் சதீஷ்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சதீஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அரியலூரில் துணை தாசில்தாரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.க்களை ‘சஸ்பெண்டு’ செய்து வருவாய் அதிகாரி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர். இவர் விடுமுறை தொடர்பாக அரியலூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கேயன் மற்றும் அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் குருமூர்த்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியது.

    இதில் ராயருக்கு ஆதரவாக வெங்கனூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் குலமாணிக்கம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

    தகராறில் 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயன் மற்றும் குருமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திகேயன் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் துணை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் ராயர், பிரபாகரன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் மாவட்ட வருவாய் அதிகாரி சத்யநாராயணன் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளார்.



    ×