என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Uvari youth murder"
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் அருகே உள்ள உவரியை அடுத்த கூடுதாழையை சேர்ந்தவர் தர்மராஜ் மாற்றுத்திறனாளி. இவரது மகன் ஜெனால்டு (வயது 24). முடிதிருத்தும் தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்தவர் லிகோரி. இவரும் சவரத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராணா சங்கர்(21). தர்மராஜ் குடும்பத்திற்கும், லிகோரி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராணா சங்கர் மற்றும் லிகோரி ஆகியோர் தர்மராஜ் ஊன்றுகோலாக பயன்படுத்தும் கம்பால் ஜெனால்டை சரமாரியாக தாக்கினர். இதில் ஜெனால்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
இதையடுத்து ராணா சங்கர் தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெனால்டை மீட்டு லிகோரி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மரம் விழுந்து காயமடைந்ததாக பொய்யான தகவல் கூறி அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெனால்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லிகோரியும், ராணா சங்கரும் சேர்ந்து கம்பால் தாக்கியதில் காயமடைந்தது தெரியவந்தது. மேலும் லிகோரி பொய்யான தகவல் கொடுத்து மருத்துவமனையில் ஜெனால்டை அனுமதித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் லிகோரியை கைது செய்தனர். தப்பியோடிய ராணா சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்