search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarakhand Tunnel Collapse"

    • பல சவால்களுக்கு இடையே போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்கின்றன
    • பி.கே. மிஷ்ரா, சிக்கிய தொழிலாளர்களுடன் தொலைத்தொடர்பு வழியாக உரையாடினார்

    உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் மழை, வெயில், பனி, மலைச்சரிவு என அனைத்துவிதமான இயற்கை மாறுதல்களினால் ஏற்படும் பருவகால மாற்றங்களால் தடைபடாமல் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன.

    இதன் ஒரு பகுதியாக, எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் (NH-134) கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே அவ்வாறு அமைக்கப்பட்டு வந்த ஒரு நீண்ட சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இதில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    அவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

    மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்களை கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி துவங்கியுள்ளது.

    இதற்கிடையே, மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்பட கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அங்கு ஏற்கெனவே வெப்பம் 4 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக உள்ளது. இது அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் கவலை கொள்ள செய்தது.

    இந்நிலையில், உள்ளே சிக்கியுள்ள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை தரும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் (principal secretary) பிரமோத் குமார் மிஷ்ரா (P.K. Mishra) இன்று அங்கு வருகை தந்தார்.


    மிஷ்ரா அங்கு நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட விவரங்களை குறித்து கொண்டார்.

    அது மட்டுமின்றி, சிக்கிய தொழிலாளர்களிடம் பி.எஸ்.என்.எல். (BSNL) தரைவழி தொலைத்தொடர்பு சாதனம் வழியாக சிறிது நேரம் உரையாடினார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார்.

    துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவதை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 நாட்கள் கடந்தும் 41 பேர் இன்னமும் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கியுள்ளனர்
    • வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிற்கு கீழே குறைந்துள்ளது

    மலைமாநிலம் என அழைக்கப்படும் வட இந்திய மாநிலம், உத்தரகாண்ட் (Uttarakhand).

    இங்குள்ள உத்தரகாசி (Uttarkashi) மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் சார்பில் மழை, வெயில், பனி, மலைச்சரிவு என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் பயணம் தடைபடாமல் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன.

    அவ்வாறு அமைக்கப்பட்டு வந்த ஒரு நீண்ட சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் (NH-134) கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இயந்திர உதவி இல்லாமல், ஆட்களை கொண்டு துளையிட்டு மீட்கும் முயற்சி துவங்கியது.

    பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கிட்டத்தட்ட 16 நாட்கள் கடந்து விட்டது. 360 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே இருக்கின்ற 41 பணியாளர்களையும் மீட்கும் பணி நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், அங்கு மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அங்கு ஏற்பட்டிருக்கும் பனிப்பொழிவின் காரணமாக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிற்கும் கீழே குறைந்துள்ளது.

    இடி, மின்னல், மழை, பனிப்பொழிவு, குளிர் என எதிர்மறை வானிலை சூழல் காரணமாக மீட்பு பணி இன்னும் தொய்வடையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அச்சத்தை போக்கும் வகையில், "மீட்பு பணியாளர்கள் எத்தகைய சூழலையும் கையாளும் விதத்தில் பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்கள்" என இந்த பணிகளை முன்னெடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சி கார்ப்பரேஷனின் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அஹ்மத் தெரிவித்தார்.

    நாட்கள் செல்ல செல்ல அவர்கள் உடல்நிலை மோசமடையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    முதலில் இயந்திர கோளாறினால் தொய்வடைந்த மீட்பு பணி, இயற்கை சீற்றங்களால் மேலும் நீண்டு கொண்டே செல்வது இந்திய மக்களை கவலையடைய செய்துள்ளது.

    • தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 15-வது நாளாக நடைபெறுகிறது.
    • சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்பப்படுகின்றன.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 15-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ஆறு திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒவ்வொரு திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது தெரிவித்துள்ளார். மேலும் சிக்கியுள்ளவர்களுக்கு போதுமான உணவு, மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி சுரங்கத்திற்குள் இருப்பவர்களை மீட்க செங்குத்தாக துளையிடும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதுவரை 15 மீட்டர்கள் வரை துளையிடப்பட்டு உள்ளன. இன்னும் 71 மீட்டர்கள் துளையிட்டால், சிக்கியுள்ளவர்களை மீட்டுவிட முடியும்.

    இதுதவிர கிடைமட்டமாக துளையிடும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் 170 மீட்டர்கள் வரை செங்குத்தாக துளையிடப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சேப்பர்ஸ் என்ற பொறியாளர் குழுவும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    • தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு.
    • ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

    தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில், சுரங்கத்திற்குள் துளையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று (நவம்பர் 25) துவங்கின.

    எனினும், ஆகர் இயந்திர பிளேடுகள் சிக்கிக் கொண்டதால் சுரங்கத்திற்குள் இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    "சுரங்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரத்தின் 16 மீட்டர்கள் வரை வெட்டி அகற்றப்பட வேண்டும். பிளாஸ்மா கட்டர் இயந்திம் மூலம் வெட்டி எடுக்கப்படுவதால், ஆகர் இயந்திர பிளேடுகளை வேகமாக அகற்ற முடியும்," என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுரங்க நிபுணரான க்ரிஸ் கூப்பர் தெரிவித்து இருக்கிறார்.

    "இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற நீண்ட காலம் ஆகிவிடும். மலை பகுதியில் பணியாற்றும் போது, எதையும் கணிக்கவே முடியாது. நாங்கள் இதுதொடர்பான பணிகள் நிறைவடைவது குறித்து எந்த கணிப்பையும் தெரிவிக்கவில்லை," என்று தேசிய பேரிடர் நிர்வாக கூட்டமைப்பின் உறுப்பினரான சையத் அடா ஹசைன் தெரிவித்து உள்ளார்.

    சுரங்கம் உருவாக்குவதில் சர்வதேச நிபுணரான ஆர்னால்டு டிக்ஸ், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்க முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதை அடுத்து, இவரின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மீட்பு பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • ஊழியர்கள் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கியுள்ள ஊழியர்கள் 41 பேரும் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ளும் முயற்சியாக அவர்களுக்கு செஸ் போர்டு மற்றும் சீட்டுக் கட்டு உள்ளிட்டவைகளை அனுப்ப மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் மனதளவில் உறுதியாக வைத்துக் கொள்ள இவை உதவியாக இருக்கும் என்று மீட்பு படையினர் நம்புகின்றனர்.  

    ×