என் மலர்
நீங்கள் தேடியது "used for agriculture"
- சொட்டு நீர் பைப்பினை வாலிபர் ஒருவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
- அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லம்பாளையம் ஏரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமா சங்கர் (49). இவரது தோட்டத்தில் பயிர்களுக்கு சொட்டுநீர் முறையில் விவசாயம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் அந்த சொட்டு நீர் பைப்பினை வாலிபர் ஒருவர் உமா சங்கரின் தோட்டத்தில் புகுந்து பைப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த தோட்ட த்தின் உரிமையாளர் உடனடியாக அங்கு சென்று அவரை பிடித்தார்.
இதையடுத்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனை அடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஒலகடம் அடுத்த தாண்டா ம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (25) என்பதும், அவர் பைப்புகளை விற்பனை செய்வதற்காக திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






