search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "use drugs"

    • அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • போதைப் பொரு ட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தனர். அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று அவர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பதும், அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×