search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Miniser"

    • வலுவான இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
    • இந்திய ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலே காரணம்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிப்பால் உயர் கல்வி அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் இளைஞர் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியர்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளை வழங்கி பணியமர்த்தி உள்ளன. பிரதமர் மோடியின் கனவான வலுவான மற்றும் தற்சார்புள்ள இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கண்டுபிடித்து உருவாக்க வேண்டும்.

    இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலியல் வளர்ச்சி அடைந்துள்ளது. இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலாலேயே இது சாத்தியமாகி உள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 400 முதல் 500 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன, தற்போது அதன் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவற்றில் 100-க்கும் மேற்பட்டவை உலக அளவில் அதிக முதலீடு தொழில்களாக மாறியுள்ளன.

    புத்தகங்களிலிருந்து அறிவை பெற்றால் போதும் என்று மட்டும் நினைக்க கூடாது. அறிவாற்றலை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நாட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்து செல்ல முடியும். அறிவியல், பொருளாதாரம், நிர்வாகம் என பல துறைகளில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்துள்ளது. அந்நிய படையெடுப்புகளால் அவை மறைந்தன.

    கடந்த காலங்களை தெரிந்து கொண்டு நமது வளம் மிக்க கலாச்சார பாரம்பரியங்களிலிருந்து மாணவர்கள் பலவற்றை கற்று கொள்ள வேண்டும். நமது பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்துக்காகவும் நமது கடந்த கால பெருமையை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

    பாரம்பரிய மற்றும் நவீன அறிவாற்றலை வழங்கி இளையதலைமுறையை சிறந்த குடிமக்களாக மாற்றும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #MonsoonSession #NEET #NEETExamCentres
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தேர்வு எழுதுவதற்காக வேறு மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும், இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டார்.



    இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இனி நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இனி, தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். #MonsoonSession #NEET #NEETExamCentres
    ×