search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unconstitutional"

    தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியில் 50 சதவீதம் உணவு, உடைகளுக்காக பிடித்தம் செய்யப்படுவதற்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    மதுரை:

    தமிழகத்திலுள்ள 9 மத்தியச்சிறைகள் மற்றும் கிளைச்சிறைகளில் சுமார் 5 ஆயிரம் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

    தொழில் திறனுக்கேற்ப 3 வகையாக கைதிகள் பிரிக்கப்பட்டு சிறையினுள் பல்வேறு விதமான வேலைகள் வழங்கப்படுகிறது. அவர்களின் பணித்திறனுக்கேற்ப 60 ரூபாய், 80 ரூபாய் மற்றும்100 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    இந்த கூலி தொகையில் 50 சதவீதம் சிறையில் கைதிகளுக்கான பராமரிப்பிற்காகவும், 20 சதவீதம் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்கவும் சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.

    தண்டனைக்கு பின்னர் விடுதலையாகும் கைதிக்கு அவர் சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வெறும் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

    இப்படி தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481-ல் மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கே.கே.ராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    கைதிகளின் கூலியில் இருந்து மிகப்பெரிய தொகை சிறை நிர்வாகத்தால் பிடித்தம் செய்யப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்துக்கு குறைவான ஊதியம் பெறும் கைதிகளிடம் இருந்து அவர்களின் பராமரிப்புக்காக 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, முறையற்றதும் கூட என கண்டம் தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சிறைகளில் கைதிகளின் உணவு, உடைகள் ஆகியவற்றுக்காக நாளொன்றுக்கு 153 ரூபாய் செலவாகிறது என குறிப்பிட்டார்.

    இருப்பினும் 100, 80 மற்றும் 60 ரூபாய் தினக்கூலி வாங்கும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்யும் தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481 அரசியலமைப்பு சட்டமீறலாகும். 

    கட்டாய வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கும் எதிரானதாகும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏற்கத்தகுந்த சில காரணங்களுக்காக அவர்களின் கூலியில் ஒரு சிறிய தொகையை வேண்டுமானால் அரசு பிடித்தம் செய்யலாம் என அறிவுறுத்தினர்.

    அதேவேளையில், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்க சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். #AadhaarVerdict #JusticeChandrachud
    புதுடெல்லி:

    ஆதார் வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பாக வழங்கினார்கள். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்தார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கவில்லை என்கிற போதிலும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    இதில் ஆதார் சட்டம் அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும். அரசின் சேவைகளைப் பெற ஆதார் அவசியம். அதேசமயம், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசின் சேவைகளை மக்களுக்கு அளிப்பதை நிறுத்தக்கூடாது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆதார் விவரங்களைப் பெறக்கூடாது என்று கூறி ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை ரத்து செய்து பெருமபான்மை நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    ஆனால், இதில் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழங்கினார். மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய விதமே தவறானது. புறவழியாக ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சாடினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

    ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றி இருந்திருக்கத் தேவையில்லை. அந்த மசோதாவை மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லாமல் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி ஆதார் சட்டத்தை கொண்டுவந்தது அரசியலமைப்புச் சட்டசத்துக்கு விரோதமானது. மோசடியாகும்.

    அரசியலமைப்புப் பிரிவு 110 பிரிவை மீறி நிறைவேற்றப்பட்டு இருப்பதால், ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது. இப்போது இருக்கும் ஆதார் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது எனக் கருத முடியாது.

    இன்றைய சூழலில் மொபைல்போன் மிக முக்கியமான கருவியாக மக்களின் வாழ்க்கையில் மாறிவிட்டது. செல்போனில் ஆதார் விவரங்களை இணைத்த விவகாரம் தனிநபர்களின் அந்தரங்கத்துக்கும், சுதந்திரத்துக்கும், சுய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மொபைல் சேவை நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை திருத்தக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின்படி வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் கடன் பெற்றவர்கள். அந்த அடிப்படையில்தான் வங்கியில் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தீவிரவாதிபோல் சித்தரித்து, கடன்காரர் போல் பாவித்துள்ளார்கள் இது மிகவும் கொடூரமானது.

    தனிமனிதர்களின் விவரங்களை ஒட்டுமொத்தமாகத் தனியார் நிறுவனங்கள் திரட்டுவதன் மூலம் அதை வேறு எந்தக் காரணங்களுக்காகவும் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தனிமனிதரின் உரிமையின்றி, அனுமதியின்றி அவரின் விவரங்களை அடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

    தகவல் சுதந்திரம், சுயஉரிமை, மற்றும் புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை மீறும்வகையில் ஆதார் திட்டம் இருக்கிறது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டை கட்டாயக்கி இருப்பது, மக்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் வழங்கும் யுஐடிஏஐ நிறுவத்துக்கு இருக்கிறது. ஆனால், முறையான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இருக்கிறது.

    இன்று இந்தியாவில் ஆதார் இல்லாமல் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது, இதுவே அரசியலமைப்புச்சட்டம் 14-வது பிரிவை மீறியது போன்றது. நாடாளுமன்றம் ஆதார் குறித்து சட்டம் இயற்ற உரிமை இருக்கும்போது, மக்களின் விவரங்களைப் பாதுகாக்காமல் இருந்தால், அது பல்வேறு உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும்

    இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
    ×