search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Un employment"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
    • யாரும் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் வேலையில்லாத் திண்டாட்டத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்தது.

    இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரசார் கலந்துகொண்டு மாநில அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். யாரும் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இதுதொடர்பாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு பதவியேற்ற முதல் ஆண்டிலேயே 2 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதி அளித்தது. இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தைச் சட்டப்பூர்வமாக்கி உள்ளது. இது வேலை செய்யாது.

    வேலை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.

    ×