search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two Youth Death"

    எழும்பூருக்கும்-சேத்துப்பட்டிற்கும் இடையே தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் சிக்கி 2 வாலிபர்கள் பலியாகினர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #TrainAccident
    சென்னை:

    மின்சார ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தன.

    கடந்த மாதம் பரங்கிமலை நிலையத்தில் ரெயிலில் தொங்கி பயணம் செய்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்ததில் உடல் சிதறி பலியானார்கள். 5 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகு ரெயில்கள் அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ஒரு மாதமாக கடற்கரை-தாம்பரம் இடையே ரெயில் விபத்து குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.

    எழும்பூருக்கும்-சேத்துப்பட்டிற்கும் இடையே தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர்களது சட்டை பாக்கெட்டில் இருந்த முகவரி மற்றும் செல்போன் மூலம் உடனடியாக அடையாளம் தெரிந்தது.

    சென்னை சாஸ்திரி நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கிஷோர் குமார் (27), முத்து என்பவரின் மகன் முனிவேல் (23) ஆகியோர் என தெரிய வந்தது.

    கடற்கரையில் இருந்து தாம்பரம் சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்த இருவரின் உடலும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #TrainAccident

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவையாறு:

    தஞ்சை அருகே உள்ள மணக்கரம்பையைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் ஸ்டாலின்ராஜ் (வயது27). கூலி தொழிலாளி.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா (26).

    இந்நிலையில் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தஞ்சை கடை வீதிக்கு வந்திருந்தனர். பின்னர் கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு மணக்கரம்பைக்கு திரும்பினர். அப்போது மணக்கரம்பையை நோக்கி அம்மன்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே தஞ்சையை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின்ராஜ், மற்றும் இளையராஜா பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தஞ்சை நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×