என் மலர்
நீங்கள் தேடியது "two people killed"
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள தேவர்முக்குலம் பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் விஜய்குமார் (வயது28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். சுருளிஅள்ளி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன் (23). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை விஜய்குமாரும், மணிகண்டனும் சுருளி அள்ளியில் உள்ள பெருமாள் கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் அங்கு நள்ளிரவு திருவிழாவை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏரிக்கரை என்று இடத்தில் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் போகும் வழியிலேயே விஜய்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை அம்பத்தூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். #TrainRunsOver #ChennaiTrainAccident
சென்னை:
அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே இன்று சிலர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழித்தடத்தில் வந்தது. தண்டவாளத்தை கடந்து சென்றவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடப்பதற்கு உயர்மட்ட பாலங்கள் இருந்தாலும் பலர் அதனை பயன்படுத்தாமல், தண்டவாளத்தின் வழியாகவே நடந்து சென்று பாதையைக் கடக்க முற்படுகின்றனர். சிக்னலுடன் கூடிய கேட்டுகள் மூடியிருக்கும்போதுகூட பொறுமையாக நிற்காமல், குறுக்கே நடந்து செல்கின்றனர். இதனால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. #TrainRunsOver #ChennaiTrainAccident
அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே இன்று சிலர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழித்தடத்தில் வந்தது. தண்டவாளத்தை கடந்து சென்றவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடப்பதற்கு உயர்மட்ட பாலங்கள் இருந்தாலும் பலர் அதனை பயன்படுத்தாமல், தண்டவாளத்தின் வழியாகவே நடந்து சென்று பாதையைக் கடக்க முற்படுகின்றனர். சிக்னலுடன் கூடிய கேட்டுகள் மூடியிருக்கும்போதுகூட பொறுமையாக நிற்காமல், குறுக்கே நடந்து செல்கின்றனர். இதனால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. #TrainRunsOver #ChennaiTrainAccident