என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையோர மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
Byமாலை மலர்28 Jan 2019 12:51 PM GMT (Updated: 28 Jan 2019 12:51 PM GMT)
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள தேவர்முக்குலம் பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் விஜய்குமார் (வயது28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். சுருளிஅள்ளி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன் (23). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை விஜய்குமாரும், மணிகண்டனும் சுருளி அள்ளியில் உள்ள பெருமாள் கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் அங்கு நள்ளிரவு திருவிழாவை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏரிக்கரை என்று இடத்தில் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் போகும் வழியிலேயே விஜய்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X