search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tv artist"

    • சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

    சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யபட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

     

    இந்நிலையில் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரிய ஹேம்நாத் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஹேம்நாத் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அவரது நண்பர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யபட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், 'தனது நீண்ட கால நண்பரான ஹேம்நாத் மூலம் அவரது மனைவி சித்ராவை எனக்கு நன்றாக தெரியும். ஹேம்நாத் சித்ராவிற்கு கொடுத்த தொல்லைகள் குறித்து ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில், காவல்துறையில் நான் மட்டும் சாட்சியம் அளித்தேன்.


    சித்ரா - ஹேம்நாத்

    இதற்காக ஹேம்நாத் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். ஹேம்நாத்தை சுதந்திரமாக வெளியே நடமாட விட்டால் சாட்சிகளைக் கலைப்பார். உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • சின்னத்திரை சித்ரா கணவர் ஹேம்நாத் குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • இன்று இந்த வழக்கின் மீது சித்ராவின் தந்தை பதில் மனு தாக்கல் செய்தார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா 2020 - ஆம் ஆண்டு டிசம்பரில் நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


    சித்ரா

    சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதுமட்டுமல்லாமல், விசாரணைக்கு ஹேம்நாத் நேரில் ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது.


    சித்ரா - ஹேம்நாத்

    இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடைக்கால மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அதில் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.

    ×