என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னத்திரை சித்ரா"

    • சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
    • சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

     

    சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது நசரேத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகை சித்ரா வழக்கில் கணவர் ஹேம்நாத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லை, முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சின்னத்திரை சித்ரா கணவர் ஹேம்நாத் குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • இன்று இந்த வழக்கின் மீது சித்ராவின் தந்தை பதில் மனு தாக்கல் செய்தார்.

    சின்னத்திரை நடிகை சித்ரா 2020 - ஆம் ஆண்டு டிசம்பரில் நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


    சித்ரா

    சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதுமட்டுமல்லாமல், விசாரணைக்கு ஹேம்நாத் நேரில் ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது.


    சித்ரா - ஹேம்நாத்

    இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடைக்கால மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அதில் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.

    ×