என் மலர்
நீங்கள் தேடியது "VJ Chitra"
- சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
- சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளூர், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது நசரேத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சித்ரா வழக்கில் கணவர் ஹேம்நாத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லை, முகாந்திரம் இல்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீர்ப்பை எதிர்த்து போலீசாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்யஉள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் தூக்கிட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகாரளித்ததோடு சித்ராவின் கணவரான ஹேம்நாத் மீது குற்றம் சாட்டினர். அதனால் நசரத்பேட்டை போலீஸார், ஹேம்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த ஹேம்நாத், ஜாமீனில் வெளியில் வந்தார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் சட்ட போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து போலீசாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்யஉள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






