search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy woman"

    கேரளா சென்று திரும்பிய திருச்சி பெண்ணுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரின் ரத்தத்தை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தில்லைநகர் 10-வது குறுக்கு தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களின் மகன் கார்த்திக். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

    அடிக்கடி கேரள மாநிலம் கல்கேட் செல்வது வழக்கம். சமீபத்தில் தாயார் ராஜேஸ்வரியை அழைத்து கொண்டு கார்த்திக் கேரளா சென்றார். அங்கு ராஜேஸ்வரிக்கு சளி, இருமல் ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. அதற்காக மகன் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் குணமாகவில்லை. பின்னர் ராஜேஸ்வரி திருச்சிக்கு வந்தார்.

    காய்ச்சல் குணமாகாததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். கேரளா சென்று வந்தவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் வந்திருக்கலாமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அனிதா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ராஜேஸ்வரியின் ரத்தம், சளி ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    தமிழிசை சவுந்தரராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய திருச்சி பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    மணப்பாறை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் அவதூறாகவும் மிகவும் தரக்குறைவாகவும் பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையறிந்த பா.ஜ.க.வினர் அந்த பெண் யார் என்று விசாரித்த போது திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள், மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தமிழிசை சவுந்திரராஜன் பற்றி அவதூறாக பேசியது மணப்பாறை பகுதியை சேர்ந்த இளம்பெண் சூர்யா ஆரோ என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது 294 (ஆபாசமாக பேசுதல்) உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×