search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Srirangam Temple"

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
    திருச்சி:

    கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று காலை மன்னார்குடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலை அவர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகன் ரேவண்ணாவும் வந்திருந்தார். அவர்களை கோவில் தலைமை பட்டரான சுந்தர் பட்டர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தேவேகவுடா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தேவேகவுடா வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து, நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு சென்றார். இதே போல் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்ப நகரில் சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் இரு தரப்பினர் மோதினர். இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்ப நகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விழாவிற்காக ஒலி பெருக்கி கட்டி பக்தி பாடல்கள் போட்டுள்ளனர். அப்போது ஒலி பெருக்கியின் சத்தத்தினை குறைக்குமாறு அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது29) கோவிலில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (52) என்பவருக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் சுப்பிரமணிக்கு ஆதரவாக ராஜ்குமார் (28) மற்றும் பெரியசாமிக்கு ஆதரவாக அவரது மகன் சிவராஜ் (20), ரெங்கராஜ் மகன் பார்த்தசாரதி (26) ஆகியோர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர். 

    பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் சுப்பிரமணி, பெரியசாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    அதன் பேரில் போலீசார் மோதலில் ஈடுபட்ட பார்த்தசாரதி, சிவராஜ், ராஜ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பெரியசாமி, சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×