search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treader"

    • கடையின் அருகே உள்ள காலியிடத்தில் திருமலைகுமார் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து மேலத்தெருவை சேர்ந்தவர் திருமலைகுமார்(வயது 40). இவர் அப்பகுதியில் நெல்லை-தென்காசி சாலையில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.

    இவர் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கடையின் அருகே உள்ள காலியிடத்தில் அவர் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். புகையிலையையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    • நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த வியாபாரி கண்ணையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பாளை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20) மற்றும் சீவலப்பேரி காட்டாம்புலியை சேர்ந்த ஜெரின் (23)ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணையாவை வழிமறித்து அரிவாள் முனையில் மிரட்டினர்.

    நெல்லை:

    நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த வியாபாரி கண்ணையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே பாளை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20) மற்றும் சீவலப்பேரி காட்டாம்புலியை சேர்ந்த ஜெரின் (23)ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணையாவை வழிமறித்து அரிவாள் முனையில் மிரட்டினர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கண்ணையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நம்பிராஜன், ஜெரின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ×