என் மலர்
நீங்கள் தேடியது "Travel Card"
- மீதமுள்ள தொகையை எந்தச் சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றப்படவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது.
- சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை RBI/NPCI வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது.
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள இருப்பு தொகையை வேறு பயண அட்டைக்கு மாற்ற இயலாது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம்,
"சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
தொலைந்துபோன மெட்ரோ இரயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் (CMRL Stored Value Cards and Singara Chennai (NCMC) Cards) மீதமுள்ள தொகையை எந்தச் சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றப்படவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. இதனால் பயணிகள் தங்கள் அட்டைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக, தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை RBI/NPCI வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படி திரும்பப் பெற முடியாது. ஏனெனில் ஒரு அட்டை தொலைந்தால் அது வேறு ஒருவரால் தவறாக பயன்படுத்தபட வாய்புள்ளது. அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை சென்னை மெட்ரோ இரயில் வழங்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம், மேலும் மேம்பட்ட அமைப்புகளை நோக்கி நாங்கள் செயல்படும்போது, பயணிகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் கருத்துக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்." என தெரிவித்துள்ளது.
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
- இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும், இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்திட வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்ல வேண்டும் , பஸ்சில் செல்லும் மாணவர்களிடம் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட துணை தலைவர்பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பா ட்டத்தில் கோரி க்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 'சிங்கார சென்னை' கார்டை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம்.
- எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை அறிமுகம் செய்துள்ளோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், சிங்கார சென்னை கார்டின் சிறப்புகள் குறித்து - மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரெயிலிலும் பயண்படுத்திக் கொள்ளலாம், சென்னை மாநகர் பேருந்துகளிலும் பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இந்த அட்டையை அறிமுகம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 50 அட்டைகளை வினியோகித்துள்ளோம்.
அட்டையை செல்போன் நம்பர் இணைந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.100 டாப் அப் செய்துக் கொள்ளலாம். இதன்மூலம், பேருந்து, ரெயில் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பயண அட்டை திட்டத்தால், பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சில்லலை பிரச்சனை இருக்காது. இதனால், பணி சுமை குறையும் என நம்புகிறோம்.
மாநகர் போக்குவரத்து கழகத்தின் 20 பேருந்து நிலையங்களில் அட்டை வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கூடுதலான இடங்களில் அட்டை வழங்கப்படும்.
ஏற்கனவே சிஎம்ஆர்எல் அட்டை வைத்திருப்பவர்கள் அதே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். புதிய அட்டை வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இந்த அட்டை சென்னையில் மட்டுமல்ல, வெளி மாநிலத்தில் இயங்கும் மெட்ரோ ரெயிலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே அனுமதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






