search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training meeting"

    • விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நடைபெற்றது.
    • செயலியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை துறை சார்பில் ஜக்கனாரையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், தோட்டக்கலை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் உழவன் செயலியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சியில் தேயிலை அறுவடை எந்திரம் கண்காட்சி நடத்தப்பட்டது. உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் அனைவரையும் வரவேற்றார். 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கூட்ட முடிவில் மணிமேகலா நன்றி கூறினார்

    • சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது
    • எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன், ஜெயராஜ், சங்கரநயினார், வெள்ளத்துரை பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதிநாயகம், வைகை ஜேம்ஸ், பிரம்மா, முத்து சுப்பிரமணியன், கணேசன், வேலுச்சாமி, பெடரல் கார்த்திக், சுடலைமுத்து, எழில், செல்வகுமார், ராஜன், பவுன், மாரியப்பன், முத்து சுப்பிரமணியன், முருகன் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டியன், உதவியாளர் சிலம்பரசன், ஓவர்சீஸ் ராமசாமி, அலுவலர்கள், பணியாளர்கள், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×