search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்
    X

    கோத்தகிரியில் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்

    • விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நடைபெற்றது.
    • செயலியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை துறை சார்பில் ஜக்கனாரையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், தோட்டக்கலை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் உழவன் செயலியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சியில் தேயிலை அறுவடை எந்திரம் கண்காட்சி நடத்தப்பட்டது. உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் அனைவரையும் வரவேற்றார். 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கூட்ட முடிவில் மணிமேகலா நன்றி கூறினார்

    Next Story
    ×