என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffice change"

    • நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது.
    • பொது மக்கள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கோவை,

    கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாநகரில் நாளை(வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சுண்டப்பாளையம் ரோடு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.

    இதை யொட்டி நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய் யப்படுகிறது.

    உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம், சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    காந்திபுரம் மற்றும்ட வுன்ஹா லில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று பைபாஸ் ரோடு - சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும்.

    உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரெயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்ல அனுமதிக்கப்படும்.

    தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எஸ்.ஆர்.ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு- ஏ.ஆர்.சி. சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நி லைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் அடையலாம்.

    பேரூர் சாலையிலிருந்து தடாகம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் சிவா லயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, பனமரத்தூர், பூசா ரிபாளையம், சீரநாய்க்கன் பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி ரோட்டில் இடது புறமாக திரும்பி தடாகம் சாலையில் பயணிக்கலாம்.

    விநாயகர் சிலை ஊர்வல பாதைகளான ராஜவீதி, ரங்கே கவுண்டர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார் பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையரவீதி, தெப்பக்குளம் மைதானம், பூமார்க் கெட்ரோடு, பால்மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி.ரோடு. லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×