என் மலர்
நீங்கள் தேடியது "Tollbooth"
- கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
- அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
- உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
- திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக திருமங்கலம் உள்ளூர் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள்-சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அவ்வப்போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் தொடரும்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண விலக்கு அளித்தது. கடந்த 1-ந் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் மாதாந்திர கட்டணமாக ரூ.310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதை கண்டித்து கடந்த 22-ந் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன.
இந்த போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளின் ஆேலாசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.
இதில் பேசியவர்கள் அமைச்சர் மூர்த்தி தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.
கப்பலூர் சுங்கசாவடியில் உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என்று அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு பலனை அளிக்கும்.
அடுத்த கட்ட நடவ டிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்று கையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் மட்டுமே சுங்கச்சாவடியை அகற்ற முடியும் என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்று வதற்கானசுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளோடு கப்பலூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கப்பலூர் சுங்கச்சாவடியில் காரை திருப்பி தராததால் ஒரு வாலிபர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அரவிந்த்குமார் (வயது30). இவர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்க கட்டணம் கட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால் அதனை அகற்ற வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அடிக்கடி தகராறு ஏற்பது வழக்கம். மேலும் திருமங்கலம் நகர் பகுதியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு உள்ளது. இருப்பினும் அடிக்கடி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரவிந்தன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தபோது சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டதால், காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும் நேற்று இரவு தனது காரை எடுக்க சென்றார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளோம். அங்கு சென்று பெற்று கொள்ளுங்கள் என்று கூறி காரை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் சுங்கசாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இச்சம்பவம் குறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.