என் மலர்
நீங்கள் தேடியது "TN College"
- தமிழகத்தில் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் என நிர்ணயம்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 24ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய், பதிவு கட்டணம்- 2 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






