search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tipper trucks"

    • வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது.
    • சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வழியாக சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கு குழாய் வழியாக காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இதில் அதிக பாரம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளால் காவிரி குடிநீர் குழாய் கடந்த 6 மாதத்திற்கு முன்பே உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பாளையம் பகுதிக்கு காவிரி குடிநீர் முழுமையாக செல்லவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வாய்ப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியே சென்ற டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

    அப்போது உடைந்த குழாயை சரி செய்தால்தான் லாரிகளை விடுவிப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் லாரி உரிமையாளர்கள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

    மேலும் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.
    • ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ளது ஈங்கூர். இங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் இருந்து புலவனூர் செல்லும் ரோடு வேலை கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் பாலம் அமைப்பதற்கான குழி தோண்டிய நிலையில் வேலை நடைபெறாமல் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது.

    பல்வேறு முறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் , பஞ்சாயத்து நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை இல்லாமல் இருந்தது.

    இதனையடுத்து பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.

    பின்னர் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக எம்.எல்.ஏ. விரைந்து சென்றார்.

    அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் நடவடிக்கை எடுத்து ரோடு வேலை மற்றும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×