என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Threats with a knife"

    • ரூ.2 ஆயிரம் அபேஸ்
    • ெஜயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் பொய்கை, கன்னிகாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38).

    இவர் நேற்று பொய்கை சந்தை மேடு எதிரே உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பழனிச்சாமியிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து பழனிசாமி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழனிசாமியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் சைதாப்பேட்டை சரிப் சுபேதார் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் அருண் (25) என தெரியவந்தது.

    போலீசார் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண் ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மது போதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர்.

    அங்குள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக மது போதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வாலிபர் ஒருவர் மிரட்டி சுற்றித் திரிந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திரியாலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஆதித்யன் (வயது 21) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆதித்யனை கைது செய்தனர்.

    ×