என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
    X

    கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

    • ரூ.2 ஆயிரம் அபேஸ்
    • ெஜயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் பொய்கை, கன்னிகாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38).

    இவர் நேற்று பொய்கை சந்தை மேடு எதிரே உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பழனிச்சாமியிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து பழனிசாமி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழனிசாமியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் சைதாப்பேட்டை சரிப் சுபேதார் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் அருண் (25) என தெரியவந்தது.

    போலீசார் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண் ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×