search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thottiyam"

    தொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மின்னத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி கலா ( வயது 23) . இவர்களுக்கு 2 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கலாவிற்கும் ராஜீவ்காந்திக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த கலா வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலாவின் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியம் அருகே 2 வாய், 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் பழனியாண்டி. வெற்றிலை விவசாயியான இவர் வீட்டில் பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசுமாடு ஒன்று கன்று குட்டியை ஈன்றது. அந்த கன்று குட்டி வழக்கமான கன்று குட்டியை விட வித்தியாசமாக 2 வாய்கள், 4 கண்கள் இருப்பதை கண்டு பழனியாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கன்றுக்குட்டிக்கு 2 தலைகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் ஒரு தலையை அகற்றி விடலாம். ஆனால், வாய் மட்டுமே தனியாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். 

    தற்போது பழனியாண்டி குடும்பத்தினர் அந்த கன்றுக்குட்டிக்கு 2 வாய் வழியாகவும் பால் கொடுத்து வருகின்றனர். இந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த கொத்தனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் கள்ளுக்கடை வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் முருகானந்தம் (26). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி தொட்டியம் மாதா கோவில் அருகில் திருச்சி - சேலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது அந்த பகுதியை சேர்ந்த ராஜவர்மன்(20) என்பவர் ஓட்டி வந்த இரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார். அவரை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகானந்தம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×