search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "miracle calf"

    தொட்டியம் அருகே 2 வாய், 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் பழனியாண்டி. வெற்றிலை விவசாயியான இவர் வீட்டில் பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசுமாடு ஒன்று கன்று குட்டியை ஈன்றது. அந்த கன்று குட்டி வழக்கமான கன்று குட்டியை விட வித்தியாசமாக 2 வாய்கள், 4 கண்கள் இருப்பதை கண்டு பழனியாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கன்றுக்குட்டிக்கு 2 தலைகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் ஒரு தலையை அகற்றி விடலாம். ஆனால், வாய் மட்டுமே தனியாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். 

    தற்போது பழனியாண்டி குடும்பத்தினர் அந்த கன்றுக்குட்டிக்கு 2 வாய் வழியாகவும் பால் கொடுத்து வருகின்றனர். இந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    ×