என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvekadu Karumariamman"
- உலக உயிர்களுக்கு பாதிப்பு உண்டானது.
- வனப்பகுதி, மூலிகைத் தாவரங்கள் நிறைந்த மருத்துவ குணம் மிகுந்த பகுதி.
சென்னையின் புறநகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில். திருவேற்காடு எனும் பெயருக்கு `தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம்' என்பது பொருளாகும். முன் காலத்தில் இப்பகுதியில் இருந்த வனப்பகுதி, மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத் தாவரங்களை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
தலபுராண கதைகளின்படி தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாக திரிந்தார். அந்த சமயத்தில் அவர் சூரியக் கடவுளுக்கு அருள்வாக்கு சொல்வதற்காக சென்றுள்ளார். அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் தேவியை அவமதித்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட தேவி கருமாரியம்மன், சூரியக்கடவுளின் இடம் விட்டு அகன்றார்.
இதனால் சூரியனின் பிரகாசம் மறைந்தது. உலகம் இருண்டு, உலக உயிர்களுக்கு பாதிப்பு உண்டானது. தன் தவறை உணர்ந்த சூரியன், தேவியிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது தேவியானவர், வாரத்தின் 7-வது நாளை தேவி கருமாரி தினமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கான விசேஷ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.






