search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvallur district"

    திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி 25 பள்ளிகள் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
    திருவள்ளூர்:

    தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாமலும், உரிய தடையின்மை சான்று பெறாமலும் இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

    அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி 25 பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். 

    தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் அந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கூறினார். அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை பெற்றோர் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு இதன் பாதித்து ஏற்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் மாதிரி சோதனை நடத்தப்பட்டதில் நேற்று 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

    திருத்தணி விநாயகபுரத்தை சேர்ந்தவர் முனி கிருஷ்ணன் (23), பெரியபாளையம் முகர்ப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (30). ஊத்துக்கோட்டை லட்சவாக்கம் கிரமத்தை சேர்ந்த சுகந்தி (13) ஆகியோர் 3 கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்த போது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும் 11பேருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழு தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #DenguFever
    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 82 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டப்படுவதால் தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவுப்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் காவேரி, ரவிக்குமார் ஆகியோர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 324 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    மேலும் 25 சரக்கு வாகனம், 2 தனியார் பஸ்கள், 2 சுற்றுலா பஸ் உள்ளிட்ட 55 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல் 82 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக வேகம், லைசென்ஸ், ஹெல்மேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட விதிமுறை மீறி வண்டி ஓட்டிய 239 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ. 23 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டன. #tamilnews
    ×