என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruthani railway station"

    • கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இளைய தலைமுறை உள்ளது
    • சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

    திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், 

    "சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான, அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும்,  சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் காலதாமதமாக வந்தால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் காலதாமதமாக வந்து செல்கின்றன. இதனால் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்வோரும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி ரெயில்வே ஊழியர்களிடம் புகார் செய்தும் வழக்கம் போல் ரெயில்கள் தாமதமாக வந்து சென்றன.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திருத்தணி ரெயில் நிலையத்தில் சுமார் 200-க் கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி செல்லும் விரைவு ரெயில் தாமதமாக வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருத்தணிக்கு வந்த  மின்சார ரெயிலையும் மறித்தனர். பயணிகள் அனைவரும் தண்டவாளத்தில் நின்றபடி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி. சேகர், தாசில்தார் நரசிம்மன், ரெயில்வே இன்ஸ்பெக்டர் முகேஷ் ரஷாக் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து  பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    ×