search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukarthikai festival"

    • இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் பெரும்பாலான வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். திருக்கார்த்திகை நாளில் அனைத்து கோவில்களிலும் லட்சதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றுமுதல் 3 நாட்கள் வீடுகள் மற்றும் கோவி ல்களில் விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்படும். அதனைமுன்னிட்டு திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த தொழிலில் ஈடுபட்:டு வரும் கஜேந்திரன் என்பவர் கூறுகையில், கார்த்திகை விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன விளக்குகள் தயாரித்து வருகிறோம். இந்த வருடம் புது வரவாக அன்னவிளக்கு அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது. முறத்தில் அன்னலட்சுமி விளக்கு வைத்து தயாரித்துள்ளோம்.

    இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர வழக்கமாக தயாரிக்கப்படும் கார்த்திகை விளக்குகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 முதல் ரூ.500 வரை விலையில் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. பஞ்சமுக விநாயகர், மயில்விளக்கு, கஜமுக விளக்கு, தொகுப்பு விளக்கு, தாமரைவிளக்கு உள்ளிட்ட விளக்குகளும் தயாரித்து வருகிறோம்.

    திண்டுக்கல் மட்டுமின்றி சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விளக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. 3 இன்ச் முதல் 2 அடி வரை உயரம் கொண்ட விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இடையில் பெய்த மழை காரணமாக விளக்குகள் தயாரிக்கும பணி சற்று தாமதமானது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால் விளக்குகளை உலர வைக்க ஏதுவாக உள்ளது.

    கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் விளக்குகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    • நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது
    • கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ள பொம்மன்பட்டி யில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இதில் 4 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொடர்ந்து விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளில் ஏற்றப்படும் விளக்குகள், கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

    இது தவிர சாமி சிலைகள், களி மண்ணால் ஆன அடுப்பு, மண்பானைகள், சிறிய மற்றும் பெரிய பானைகளும் தயாரித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பூசாரி செல்வம் (வயது 52), ஜெகநாதன் (45) ஆகியோர் பண்டிகைக்கு குறைந்த அளவு நாட்களே இருப்ப தால் மும்முரமாக விளக்கு கள் தயாரித்து வருகின்றனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு இந்த ஆண்டு கோவில்களில் வழிபாடு நடத்த முழுமை யான அனுமதி வழங்க ப்பட்டுள்ளது. இதனால் விளக்குகள் ஆர்டர் அதிகரித்துள்ளது. மேலும் சீசன் காலங்களில் மழை பெய்து வந்ததால் தயாரித்த பொருட்களை காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பகலில் வெயில் அடிப்பதாலும் மழையின் தாக்கம் குறைந்துள்ள தாலும் விளக்குகள் காய வைப்பதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.

    ஆனால் போதிய களிமண் கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடையின்றி களிமண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நாட்களில் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றனர்.

    ×