search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே திருக்கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்
    X

    வடமதுரை அருகே வெள்ளமொம்மன்பட்டியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    வடமதுரை அருகே திருக்கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

    • நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது
    • கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ள பொம்மன்பட்டி யில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இதில் 4 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொடர்ந்து விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளில் ஏற்றப்படும் விளக்குகள், கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

    இது தவிர சாமி சிலைகள், களி மண்ணால் ஆன அடுப்பு, மண்பானைகள், சிறிய மற்றும் பெரிய பானைகளும் தயாரித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பூசாரி செல்வம் (வயது 52), ஜெகநாதன் (45) ஆகியோர் பண்டிகைக்கு குறைந்த அளவு நாட்களே இருப்ப தால் மும்முரமாக விளக்கு கள் தயாரித்து வருகின்றனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு இந்த ஆண்டு கோவில்களில் வழிபாடு நடத்த முழுமை யான அனுமதி வழங்க ப்பட்டுள்ளது. இதனால் விளக்குகள் ஆர்டர் அதிகரித்துள்ளது. மேலும் சீசன் காலங்களில் மழை பெய்து வந்ததால் தயாரித்த பொருட்களை காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பகலில் வெயில் அடிப்பதாலும் மழையின் தாக்கம் குறைந்துள்ள தாலும் விளக்குகள் காய வைப்பதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.

    ஆனால் போதிய களிமண் கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடையின்றி களிமண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நாட்களில் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×