search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் திருக்கார்த்திகை விழாவிற்காக விளக்குகள் தயாரிப்பு மும்முரம்
    X

    முறத்தில் அன்னலட்சுமி விளக்கு தயாரித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

    திண்டுக்கல்லில் திருக்கார்த்திகை விழாவிற்காக விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

    • இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் பெரும்பாலான வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். திருக்கார்த்திகை நாளில் அனைத்து கோவில்களிலும் லட்சதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றுமுதல் 3 நாட்கள் வீடுகள் மற்றும் கோவி ல்களில் விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்படும். அதனைமுன்னிட்டு திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த தொழிலில் ஈடுபட்:டு வரும் கஜேந்திரன் என்பவர் கூறுகையில், கார்த்திகை விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன விளக்குகள் தயாரித்து வருகிறோம். இந்த வருடம் புது வரவாக அன்னவிளக்கு அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது. முறத்தில் அன்னலட்சுமி விளக்கு வைத்து தயாரித்துள்ளோம்.

    இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர வழக்கமாக தயாரிக்கப்படும் கார்த்திகை விளக்குகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 முதல் ரூ.500 வரை விலையில் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. பஞ்சமுக விநாயகர், மயில்விளக்கு, கஜமுக விளக்கு, தொகுப்பு விளக்கு, தாமரைவிளக்கு உள்ளிட்ட விளக்குகளும் தயாரித்து வருகிறோம்.

    திண்டுக்கல் மட்டுமின்றி சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விளக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. 3 இன்ச் முதல் 2 அடி வரை உயரம் கொண்ட விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இடையில் பெய்த மழை காரணமாக விளக்குகள் தயாரிக்கும பணி சற்று தாமதமானது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால் விளக்குகளை உலர வைக்க ஏதுவாக உள்ளது.

    கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் விளக்குகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    Next Story
    ×