search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thentirupati"

    • திருவேங்கடநாதபுரம் கோவிலில் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக் கிழமையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு இன்று அதி காலை முதல் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடா ஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்தி ருந்து பெருமாளை பக்தர் கள் தரிசனம் செய்தனர்.

    இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    அங்கும் நீண்ட வரிசை யில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு கருட வாகனத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடை பெற உள்ளது.

    மாநகரில் மைய பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வீரராகவ பெருமாள் கோவி லில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்திகள் நடை பெற்றது.

    தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னா் மகா பூர்ணாகுதி நடைபெற்று பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடை பெற்று நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடை பெற்றது.

    ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்துகொண்டு பெருமாளை தாிசனம் செய்தனா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.

    இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாரா தனம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாத மாக வழங்கப்பட்டது.அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டு ராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந் தது. இரவில் கருடசேவை நடக்கிறது.

    இதே போல் நெல்லை பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களுக்கும், சேரன்மகாதேவி, அம்பை பகுதியில் இருந்தும் அந்தந்த பகுதி பெருமாள் கோவி லுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதி யாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×