search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The van overturned"

    • அய்யப்ப பக்தர்கள் காயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். வேனை டிரைவர் மற்றும் உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    எட்டிவாடி ரெயில்வே கேட் அருகே சென்ற போது வேனின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. முற்றிலும் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த அறிவழகன் (43), சஞ்சய் (33) வாரி (18) ஆகிய 3 பேர் படுகாயமும், உள்பட 16 பேர் லேசான காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக சந்தவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே வளைகாப்பு கோஷ்டி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர். ஆலப்பாக்கம் பகுதியில் சென்ற போது வேனின் டயர் வெடித்தது.

    இதில் தறிகெட்டு ஓடிய அந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் சென்ற தங்கமணி (வயது 35), செல்வி (40), முத்தமிழ் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×