search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது
    X

    டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது

    • அய்யப்ப பக்தர்கள் காயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். வேனை டிரைவர் மற்றும் உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    எட்டிவாடி ரெயில்வே கேட் அருகே சென்ற போது வேனின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. முற்றிலும் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த அறிவழகன் (43), சஞ்சய் (33) வாரி (18) ஆகிய 3 பேர் படுகாயமும், உள்பட 16 பேர் லேசான காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக சந்தவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×