search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana govt"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    • கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது.

    கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

    தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

    பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

    தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும்.

    அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம்.

    ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

    இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:-

    இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

    தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, டாக்டர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

    தெலுங்கானா மாநிலத்தில் பொதுத்தேர்வில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #PublicExam
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மிடியேட் தேர்வு (11 மற்றும் 12-ம் வகுப்பு) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 9.47 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் மிகப்பெரிய குளறுபடி காணப்பட்டது.

    பாஸ் மதிப்பெண் பெற வேண்டிய 3.28 லட்சம் பேர் தோல்வி அடைந்ததாக தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு முடிவு காரணமாக 21 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    இதைதொடர்ந்து தெலுங்கானா பள்ளி கல்வித்துறை 3 பேர்கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்தநிலையில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் இருந்த விவரம் வெளியே தெரிய வந்து உள்ளது.

    கிரிஜா நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    அவர் வர்த்தக பாடத்தில் 99, சிவிக்ஸ் பாடத்தில் 96, பொருளாதாரம் 95, ஆங்கிலம் 68 பெற்று இருந்தார். தெலுங்கு பாடத்தில் மதிப்பெண் இல்லாமல் தோல்வி அடைந்ததாக முடிவு வெளியானதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அப்போது அவருக்கு 99 மார்க்குக்கு பதிலாக 0 மார்க் போடப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து அவரது தெலுங்கு பேப்பரை மதிப்பீடு செய்த ஆசிரியை உமாதேவியை சஸ்பெண்டு செய்து தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தனியார் பள்ளியில் பணிபுரியும் அந்த ஆசிரியையை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. #PublicExam
    ×