search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager-girl dies"

    • விபத்துகளில் வாலிபர்-பெண் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள சாலை இலுப்பை குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (24). இவர் திருச்சுழி-காரியாபட்டி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி முத்துலட்சுமி (38). இவர்கள் காசுகடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த முத்துலட்சுமி திடீரென தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×