search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher dies"

    தாம்பரம் அருகே மணல் லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29).

    இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் ரஞ்சித் குமாருடன் படப்பைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கரசங்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மணல் லாரி வேகமாக வந்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆசிரியர் சந்தோஷ் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

    படுகாயம் அடைந்த ரஞ்சித் குமார் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். அவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தேடி வருகிறார்.

    விபத்தில் மரணம் அடைந்த ஆசிரியர் சந்தோஷ் மனைவி பெயர் பார்கவி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள்தான் ஆகிறது.
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார்.

    அங்குள்ள கரும்பு தோட்டத்தை பார்வையிட செல்லும்போது கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக குமார் மிதித்து விட்டார்.

    இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    குமாரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலத்தில் இன்று காலை கல்லூரி பஸ் மோதிய விபத்தில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி மோட்டாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 57). இவர் வாழப்பாடி அருகே உள்ள நாட்டாமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    சந்திரா இன்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். அவரது கணவர் கனகராஜ் வீட்டில் இருந்து அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    அஸ்தம்பட்டி சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வந்த போது பின்னால் வந்த கல்லூரி பஸ் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சந்திரா மீது பஸ் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். கனகராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

    தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×