என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamilnad Mercantile Bank"
- முதன்மை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது.
- கடன் பெறுவதற்கான எழிய முறை, கால அவகாசம் உள்ளிட்ட சேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எம்.எஸ்.எம்.இ. எனப்படும் குறு, சிறு, நடுத்தர தொழிலுக்கான செயலாக்க மையத்தை சென்னையில் முதல்முறையாக திறக்கிறது. இதன் துவக்க விழா, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் செய்து வருபவர்கள், புதிய தொழில் துவங்குவோர் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்., எம்.எஸ்.எம்.இ கடன் பெறுவதற்கான எழிய முறை, கால அவகாசம், கடன் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட சேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.
தற்போது 100 ஆண்டுகளை கடந்து 21 மாநிலங்களில், 533 கிளைகளுடன், 50 லட்சத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் கொண்ட இந்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியானது, எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையத்தை தற்போது தான் முதல் முறையாக திறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக குழு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விதிமீறல் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய வழிமுறைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பின்பற்ற தவறியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-ன் பிரிவுகள் 47 ஏ (1) (சி) உடன் இணைந்த பிரிவுகள் 46(4) (1)-ன் படி தண்டனைக்குரிய குற்றம் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தது.
அதன்படி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்து நட வடிக்கை எடுத்து உள்ளது. #TamilnadMercantileBank #RBI #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்