search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் எம்.எஸ்.எம்.இ. சேவையை துவக்கியது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
    X

    சென்னையில் எம்.எஸ்.எம்.இ. சேவையை துவக்கியது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

    • முதன்மை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது.
    • கடன் பெறுவதற்கான எழிய முறை, கால அவகாசம் உள்ளிட்ட சேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எம்.எஸ்.எம்.இ. எனப்படும் குறு, சிறு, நடுத்தர தொழிலுக்கான செயலாக்க மையத்தை சென்னையில் முதல்முறையாக திறக்கிறது. இதன் துவக்க விழா, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

    இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் செய்து வருபவர்கள், புதிய தொழில் துவங்குவோர் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்., எம்.எஸ்.எம்.இ கடன் பெறுவதற்கான எழிய முறை, கால அவகாசம், கடன் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட சேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.

    தற்போது 100 ஆண்டுகளை கடந்து 21 மாநிலங்களில், 533 கிளைகளுடன், 50 லட்சத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் கொண்ட இந்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியானது, எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையத்தை தற்போது தான் முதல் முறையாக திறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×